Category: Tamil

g11

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

30-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

18.அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:18 NKJV.

நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,இந்த மாதத்தின் இறுதிக்குள் வரும்வேளையில், இந்த மாதத்தின் வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை சீர்தூக்கிப் பார்ப்போம்.
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்தை மீட்கும்படியாக அனுப்பினார், அவரை நாம் அனைவரும் இயேசு என்று அறிவோம்.

தேவன் இந்த இயேசுவை கர்த்தராகவும்,கிறிஸ்துவாகவும் அனுப்பினார் (அப்போஸ்தலர் 2:36). அவர் கிறிஸ்து, ஏனென்றால் அவர் நம்முடைய எல்லா பாவங்களையும் அவர் மீது சுமந்து நம்மை நீதிமான்களாக்கினார். தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி,தம்முடைய வலது பாரிசத்தில் உட்காரவைத்து,பரலோகத்திலும்,பூமியிலும்,பூமியில் உள்ள சகல நாமங்களுக்கும் மேலாக உயர்த்தி,நம்மை அவருடன் அரசாள வைக்கும் போது அவர் என்றென்றுமாகிய கர்த்தர்.

இயேசுவின் மீது தேவன் வைத்த இந்த மேன்மையே நம்மை ஆபிரகாமின் சந்ததியாக்கியது,எனவே ஆபிரகாமின் ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறோம், மேலும் நாம் உலகின் வாரிசாக இருக்கிறோம்.

ஆகையால், இயேசு கிறிஸ்துவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் காரணமாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக ஆக்கப்பட்டீர்கள் என்று நீங்கள் நம்பும்போதும், ஒவ்வொரு ஆசீர்வாதமும் உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் உரித்தாகிறது. இதுவே ஆபிரகாம் நம்பிய நற்செய்தியாகும்,மேலும் ஆபிரகாமுக்கு அது நீதியாக எண்ணப்பட்டது.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ,யாரை நம்புகிறீர்களோ அதை வெளிப்படுத்துவது விசுவாச அறிக்கை என்று அழைக்கப்படுகிறது!
(2 கொரிந்தியர் 4:13) .
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி என்றும்,நீங்கள் ஆபிரகாமின் சந்ததி என்றும்,ஆபிரகாம் விசுவாசிக்கும் ஆசீர்வாதத்தால் நீங்களும் ஆசீர்வதிக்கப்படுகிறீர்கள் என்றும் தொடர்ந்து அறிக்கையிடுங்கள்,ஏனெனில் நீங்கள் உலகத்தின் வாரிசாக இருக்கிறீர்கள் மற்றும் ஒருபோதும் உலகத்தின் அடிமை அல்ல. அல்லேலூயா!ஆமென் 🙏

இந்த மாதத்தில் சத்தியத்தை மிகவும் கிருபையாக அருளி, தேவனுடைய தயவைப் பற்றிய ஒரு நுண்ணறிவைக் கொடுத்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்,இதுவே மகிமையின் ராஜாவுடன் நம்மை ஆளுகை செய்ய வழிவகுத்தது!

என் அன்பானவர்களே, ஆண்டவரையும் அவருடைய நீதியையும் அறிய இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் என்னுடன் இணைந்ததற்கு நன்றி.

இயேசுவின் நாமத்தில்,நம் கர்த்தரின் மகத்தான வெளிப்பாடுகளுள்ள புதிய மாதத்திற்கு நாளை என்னுடன் மீண்டும் இணையுங்கள்.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்*!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g111

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய நீதி உங்களுக்குள் வருவதால் வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

29-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவருடைய நீதி உங்களுக்குள் வருவதால் வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

5. இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
9. இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.லூக்கா 19:5, 9-10 NKJV.

சகேயு என்பவர் பணம் சம்பாதிப்பதற்காக நெறிமுறையற்ற மற்றும் நேர்மையற்ற நடைமுறைகளுக்குப் பெயர் போனவர்.மேலும் தலைமை வரி வசூலிப்பவராக இருந்ததால்,அநீதியாக செல்வத்தை குவித்ததால் மக்கள் அவரை வெறுத்தனர்.அவரது வீடு அனைத்து தெய்வபக்தியற்ற மற்றும் பாவ நடவடிக்கைகளால் நிறைந்த திருடர்களின் குகையாக பார்க்கப்பட்டது.

இயேசு அவருடைய வாழ்க்கையிலும் அவருடைய வீட்டிலும் நுழைந்தார்,சகேயுவைப் பற்றிய அனைத்து குறைபாடுகளும் முற்றிலும் மாறிவிட்டன.சகேயு என்ற மனிதன் மகிமையின் ராஜாவை சந்தித்தான் அதன்மூலம்,அவன் வாழ்க்கை மறுரூபமடைந்தது.

தேவனின் கிருபை இந்த தொலைந்து போன மனிதனை தேடிக் கண்டுபிடித்தது,தேவ நீதி அவனது வாழ்க்கையைச் சரியாக்கியது!

ஆம் என் அன்பானவர்களே, இந்த வாரம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கை, உங்கள் வணிகம், உங்கள் தொழில், உங்கள் வீடு மற்றும் உங்கள் குடும்பத்தில் அடியெடுத்து வைக்கிறார்.அவருடைய கிருபை உங்களைக் தேடிக் கண்டுபிடிக்கும்,அவருடைய நீதியானது கோணலான பாதைகளை நேராக்குகிறது.நீங்கள் மீண்டும் பழைய வாழ்க்கையில் இருக்க மாட்டிர்கள்.அற்புதத்திற்கு தயாராய் இருங்கள்! இப்போது உங்கள் குறைபாடுகள் உங்களுக்கு சாதகமாக மாறுகிறது! அல்லேலூயா!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தியுங்கள்,அவருடைய நீதி உங்களுக்குள் வருவதால் வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g16

தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

26-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
5. அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.ஆதியாகமம் 15:2, 5-6 NKJV

விசுவாசத்தினால் வரும் நீதியின் வெளிப்பாட்டைத் தேடும்போது,நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதம் உங்களைத் தேடி வரும்! அல்லேலூயா!

கீழ்வரும் பகுதியில் நம் பிதாவாகிய ஆபிரகாமின் சாட்சியைப் பார்க்கிறோம்,.அவர் ஒரு குழந்தையைப் பெற ஆவலோடு தேடினார்,ஏனென்றால் அவர் குழந்தை இல்லாமல் வயதானவராக மாறிக்கொண்டிருந்தார்.அவர் தேவனின் வாக்குறுதிகளை அறிக்கை செய்துகொண்டிருந்தார்,அப்படியே மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கடந்துவிட்டன,எதுவும் நடக்கவில்லை.அவர் முதன்முறையாக தேவனை நம்பி, தனது உறவினர்களையும் நாட்டையும் விட்டு தேவன் அவரை அழைத்த தேசத்திற்கு வந்ததிலிருந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன.

குழந்தை இல்லாமையின் பிரச்சினை உண்மையில் ஆபிரகாமை மிகவும் கடுமையாக பாதித்தது மற்றும் விரக்தியோடு அவர் தேவனைத் தேடினார், அப்பொழுது தேவ நீதியைத் தேடுமாறு அவருக்கு நினைவூட்டி தேவன் அவரை அமைதிப்படுத்தினார்,அதன் மூலம்,ஆசீர்வாதம் அவரைத் தேடி வரும் என்று தேவன் உரைத்தார் .
தேவன் ஆபிரகாமுக்கு தேவ நீதியைப் பற்றிய புதிய புரிதலைக் கொடுத்தார்,எனவே ஆபிரகாமுக்கு சாத்தியமற்றது என்று தோன்றியதை மிகவும் தெளிவாகக் காணக்கூடியதாகவும் நிச்சயமாக சாத்தியமாகும் என்று ஆபிரகாம் விசுவாசித்தார்!

தேவநீதியைப் பற்றிய புதிய புரிதலில்,ஆபிரகாம் ஒரு குழந்தைக்காக பிரயாசப்பட்டார்,ஆனால்,தேவன் அவரை எண்ணற்ற குழந்தைகளுக்குத் தந்தையாக ஆக்குவதற்கு ஏற்கனவே ஆணையிட்டிருந்ததை கண்டார்.

என் அன்பானவர்களே,நீங்கள் விடுதலையை நாடுகிறீர்கள்,ஆனால் நீங்கள் ஒரு மீட்பராக இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளார்.,நீங்கள் உங்கள் இல்லத்தின் முன்னேற்றதிற்காக பணத்தை எதிர்பார்க்கிறீர்கள்,ஆனால் நீங்கள் ஒரு நாட்டிற்கே நிதியாளராக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் குணமடையத் தேடுகிறீர்கள்,ஆனால் மக்களை குணப்படுத்தும் சுகாதார அமைப்பின் தலைவராக நீங்கள் இருக்க வேண்டும் என்றும் எண்ணிலடங்கா வியாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் சுகம் அளிக்கும்படியாக தேவன் ஆணையிட்டுள்ளார். அவருடைய நீதியைப் பற்றிய புதிய புரிதலை நீங்கள் தேடும்போது உங்களுக்கு இதுவே நடக்கும்,இதுவே நம் பிதாவாகிய ஆபிரகாமுக்கு நேர்ந்தது அவர் நம்மைகுறித்து நினைத்திருந்த காரியங்கள் நாம் நம்மைக் குறித்து நினைப்பதை காட்டிலும் பெரியது.ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! நீங்கள் ஆபிரகாமின் விதையானவர்கள்!! நீங்கள் ஆபிரகாமை நம்பி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!! ஆமென் 🙏

தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g17

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்!

25-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்!

2.ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ,எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
5.அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
6.அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. கலாத்தியர்-3:2, 5-6 NKJV

நாம் அனைவருக்கும் அறிந்த ஒரு காரியம் என்னவென்றால் விசுவாசம் இல்லாமல் நாம் தேவனிடமிருந்து எதையும் பெற முடியாது.அது பெலவீனத்திலிருந்து சுகம் பெறுதல்,சுகவாழ்வு ,புதிய வேலை வாய்ப்பு ,புதிய வியாபாரத்திற்கான வாய்ப்பு,பூமிக்குரிய அல்லது ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விசுவாசத்தினால் தவிர தேவனிடமிருந்து பெற முடியாது (எபிரெயர் 11:6)

மேலும், இந்த விசுவாசம் கேள்வியினால்(மீண்டும்,மீண்டும் கிறிஸ்துவின் வார்த்தையை உன்னிப்போடு கேட்பதினாலும்,வருகிறது என்பதை நாம் அறிவோம் (ரோமர் 10:17).
அப்படியானால்,அற்புதங்களை வெளிப்படுத்தும் ,விசுவாசத்தை உண்டு பண்ணும்படியாக நான் கேட்க வேண்டிய கிறிஸ்துவின் வார்த்தை என்ன?

தேவ நீதியைப் பற்றிய கிறிஸ்துவின் வார்த்தையே ஆகும்.

இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கண்ட வசனத்தில் கூறுகிறார்.நாம் விசுவாசத்தின் செய்தியைக் கேட்பதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம்,அபிஷேகத்தினால் நிரம்புகிறோம். ஆபிரகாம் விசுவாசித்தது,அது அவருக்கு நீதிக்காகக் கருதப்பட்டது அதேபோல் விசுவாசத்தைக் கேட்பதன் மூலம் அற்புதங்களை நாம் பெறுகிறோம்.

என் பிரியமானவர்களே,விசுவாசத்தை உண்டுபண்ணும் தேவ நீதியின் செய்தியைக் கேளுங்கள் (நாம் என்ன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்பில் அல்ல,மாறாக இயேசு எனக்காக என்ன செய்தார் என்பதை பார்க்க வேண்டும்).
கல்வாரியில் இயேசுவின் கீழ்ப்படிதலே நம்மை நீதிமான்களாக்க உந்தியது என்று சித்தரிக்கும் செய்திகள் (ரோமர் 5:19),தொலைந்து போனவர்களைத் தேடிக் காப்பாற்ற இயேசு வந்தார் என்பதைக் காட்டும் செய்திகள் (லூக்கா 19:10) – இப்படிப்பட்ட செய்திகளை கேட்க வேண்டும். .

நீங்கள் விசுவாசத்தினால் வரும் நீதியின் வெளிப்பாட்டைத் தேடும்போது,​​நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதம் உங்களைத் தேடி வரும். அல்லேலூயா!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! நீங்கள் ஆபிரகாமின் விதையானவர்கள்!! நீங்கள் ஆபிரகாமை நம்பி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g991

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்!

24-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்!

6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
29. நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:6,7,29 NKJV.

ஆபிரகாமை நீதிமானாக்கிய விசுவாசமானது – தேவன் இயேசுவின் நிமித்தம் அநீதியானவர்களை நீதிமான்களாக்குகிறார் ,அதுவே இன்றும் தேவநீதியாக இருக்கிறது என்பதே.

நாம் எவ்வாறு நீதிமான்களாக்கப்பட்டோம்?சரியானதைச் செய்வதன் மூலமா அல்ல,ஆனால் அநீதியானவர்களை தேவன் நீதிமானாக்கினார் என்று நம்புவதன் மூலம் தான்.

தேவன் அநீதியானவர்களை நீதிமானாக்கியதால்,அநீதியானவர்கள்,தம் நீதி என்று கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை,தண்டனை மட்டுமே அவர்கள் தகுதியாக இருக்கிறது. இருப்பினும்,தேவனின் கிருபை என்னவென்றால்,தேவனின் பரிசாகிய நீதி தகுதியற்றவர்களுக்கும் அநீதியானவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பதே.
இந்த தகுதியற்ற மற்றும் நிபந்தனையற்ற பரிசைப் பெறும்போது,அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். ஒருவன் நீதிமானாக்கப்படும்போது அது அவனை நீதியின் வழியில் வாழ வைக்கிறது மாறாக நீதியின் வாழ்வு அவனை நீதிமானாக்கும் என்பதல்ல.உங்களை நீதிமான்களாக்கிய அவருடைய நிபந்தனையற்ற கிருபைக்காக எல்லா மகிமையும் தேவனுக்கே. இதில் எல்லாம் தேவனுடைய செயல் மாத்திரமே, என்னுடயை செயல் ஒன்றும் இல்லை.

இதைத்தான் ஆபிரகாம் விசுவாசிதார்,அவர் என்றென்றும் நீதிமானாக இருந்தார்.அவர் நம்பியதைப் போலவே நம்பும் நாமும் அவருடைய மகன்கள் மற்றும் மகள்கள்,அவரைப் போலவே ஆசீர்வதிக்கப்பட்டு, உலகத்தின் வாரிசாக மாறி,பூமியில் ஆளுகை செய்கிறோம்.அல்லேலூயா! ஆமென் 🙏

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும்,ஆபிரகாமை விசுவாசித்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும், கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் ராஜாக்களாக அரசாளுவதற்கு தேவனுடைய நீதியை பெற்றிருக்கிறீர்கள் என்றும் அறிக்கை செய்யுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமைப் போல ஆசீர்வதிக்கப்பட்டு ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img 109

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

23-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.
8. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது.
கலாத்தியர் 3:6-8 NKJV.

தேவன் ஆபிரகாமுக்குப் பிரசங்கித்த நற்செய்தியானது-ஆபிரகாமின் சந்ததியாகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலின் அடிப்படையில் அனைவரையும் நீதிமான்களாக்கி தேசங்களை ஆசீர்வதிக்க செய்வதாகும் .

ஆபிரகாம் நற்செய்தியின் மையமாக இருக்கிறார்,இந்த நீதியின் நற்செய்தியை விசுவாசித்து கல்வாரி சிலுவையில் தம்முடைய கீழ்ப்படிதலால் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிய ஆபிரகாமுடைய விதையாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நிறைவேறியது.பாவமற்ற,மாசற்ற,தூய்மையான தேவ குமாரன்,எல்லா தேசங்களின் பாவத்தையும் நீக்கி,அதைத் தானே ஏற்றுக்கொண்டு,தேவனுடைய குமாரனை நம்புகிற ஒவ்வொருவருக்கும் தேவனின் சுபாவமாகிய(GOD KIND RIGTHEOUSNESS )தேவ நீதியை வழங்கினார்.

என் அன்பானவர்களே, நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்,நீங்கள் விசுவாசித்தால் மட்டுமே ஆபிரகாமின் அனைத்து ஆசீர்வாதங்களும் உங்களுக்கு என்றென்றும் இருக்கும்.

நீங்கள் உங்களிடமிருந்து திருப்பி எடுக்க முடியாத ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட பாக்கியசாலி .உங்கள் ஆசீர்வாதத்தை யாராலும் திருட முடியாது. உங்கள் ஆசீர்வாதத்தை யாராலும் தடுக்க முடியாது. உங்கள் ஆசீர்வாதத்தை யாராலும் திசை திருப்ப முடியாது. உங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார் என்று நீங்கள் நம்பினால்,உங்கள் இயல்பான பாவம் கூட உங்களை ஆசீர்வதிப்பதைத் தடுக்காது.ஆரோக்கியம்,செல்வம், நீண்ட ஆயுள், இளமை, நல்வாழ்வு, பெலன்,வெற்றி ,சந்ததி ஆசீர்வதம் ஆகியவைகள் உங்கள் பங்காக இருக்கும்.இவை அனைத்தும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் உங்கள் மீது முத்திரையிடப்பட்டிருக்கும். ஆமென் 🙏

நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும்,ஆபிரகாமின் விசுவாசம் போல் விசுவாசித்து ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும்,கிறிஸ்து இயேசுவுக்குள் நீங்கள் தேவனுடைய நீதி என்றும் அறிக்கை செய்யுங்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

gt5

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

22-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

6. அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
7. ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக.கலாத்தியர் 3:6-7 NKJV.

தேவன் ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததியினர் அனைவருக்கும் திரும்பிப்பெற முடியாத மற்றும் புரிந்துகொள்ள முடியாத ஆசீர்வாதங்களை வழங்கினார்.ஆபிரகாம் மற்றும் அவருடைய சந்ததியின் வழியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று தேவன் விதித்திருக்கிறார்.ஆபிரகாமின் பரம்பரையிலிருந்து ராஜாக்கள் தோன்றுவாருகள் என்று அவர் உறுதியளித்தார்.(ஆதியாகமம் 17:6).தேவன் ஆபிரகாமுக்கு அளித்த ஆசீர்வாதங்களில்,ஆபிரகாமைச் சபிக்கிற எவரும் சாபத்தை அனுபவிப்பார்கள் மற்றும் முழு பாதுகாப்பையும் உள்ளடக்கியது ஆபிரகாமின் ஆசீர்வாதம்.இந்த பாதுகாப்பு ஆபிரகாமின் பிள்ளைகளுக்கும்,பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் வாக்களிக்க ப்பட்டுள்ளது.

இப்போது, ஆபிரகாமின் சந்ததியினர் உடல் ரீதியாக உள்ள பிள்ளைகள் மட்டுமல்ல, ஜாதி, நிறம், கலாச்சாரம், சமூகம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்பும் அனைவருக்கும் உரித்தாகும் . இன்றும் ஆபிரகாம் அனுபவித்த அதே ஆசீர்வாதத்தை அனுபவிக்க அனைவரும் அழைக்கப்படுகிறோம் .அவர் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர் (ஆதியாகமம் 24:1). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாமும் அப்படித்தான் எல்லாவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்!

என் அன்பானவர்களே,நீங்களும் ஆபிரகாமின் பிள்ளைகள்,ஆபிரகாமின் எல்லா ஆசீர்வாதங்களிலும் உங்களுக்கும் பங்கு உண்டு.ஆபிரகாம் வலிமையுடனும் வீரியத்துடனும் நீண்ட காலம் வாழ்ந்தார்.ஆபிரகாம் நோய்வாய்ப்பட்டதை வேதத்தில் நாம் எங்கும் காணவில்லை.அதே வழியில்,இன்று ஆரோக்கியம் உங்கள் பங்கு.அவர் மிகுந்த செல்வந்தராக வாழ்ந்தார்,ஏனென்றால் அவர் கால்நடைகள்,வெள்ளி மற்றும் தங்கத்த்தினால் நிறைந்திருந்தார். மேலும்,அதே வழியில் செல்வமும்,செழிப்பும் உங்கள் பங்கு. அல்லேலூயா!
ஆபிரகாம் விசுவாசித்ததை மட்டும் நீங்கள் விசுவாசிக்க வேண்டும்.இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் காரணமாக தேவன் அநீதியானவர்களை நீதிமான்களாக்குகிறார், நீதிமான்களை ஆசீர்வதிக்கிறார் என்று அவர் நம்பினார்.

ஆகையால்,நீங்கள் ஆபிரகாமின் சந்ததி.நீங்கள் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் . இயேசு கிறிஸ்துவின் காரணமாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்!

18-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்!

3. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
4. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும்.
5. ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். ரோமர் 4:3-5 NKJV.

தேவன் நம் தந்தை ஆபிரகாமுக்குப் பிரசங்கித்த நற்செய்திதான் இன்று நமக்குப் பிரசங்கிக்கப்படுகிறது (கலாத்தியர் 3:8).இந்த சுவிசேஷம் விசுவாசத்தினால் வரும் நீதி.அதாவது -விசுவாசம் மூலமே தேவநீதி வருகிறது நம் கிரியை மூலம் அல்ல.
உலகில் எல்லா மதங்களுக்கும் உள்ள ஒரே கோட்பாடானது,தேவன் பக்கிதியற்றவர்களை அநீதியானவர்களாக நியாயந்தீர்க்கிறார்,மற்றும் தேவ பக்தியுள்ளவர்களை நீதிமான்களாக கருதி ஆசீர்வதிக்கிறார்.
ஆனால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி மட்டுமே தேவன் அநீதியானவர்களை நியாயப்படுத்துகிறார் என்று அறிவிக்கிறது.இதைத்தான் ஆபிரகாம் கேட்டு விசுவாசித்தார்,அந்த விசுவாசம் அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. அல்லேலூயா!

தேவனின் சொந்த மதிப்பீட்டில்,நீதிமான்கள் யாரும் இல்லை,ஒருவர் கூட இல்லை (ரோமர் 3:9,10). அப்படியானால்,தேவன் அநீதியானவர்களை நீதிமான்களாக்கினார் என்றால்,அவர் அநீதியானவரை தண்டிக்காமல் விட்டுவிடுகிறாரா ?இல்லை! ஒருபோதும் இல்லை!! அவருடைய நீதி மற்றும் பரிசுத்தம்,தேவனின் தரநிலை உயர்ந்ததாகவே இன்றும் இருக்கிறது மற்றும் அது மிக உயர்ந்த தரமாகும். இருப்பினும்,அவர் அநீதியானவர்களின் அனைத்து பாவங்களையும் இயேசுவின் உடலில் சுமத்தினார்,அதன்படி நம்முடைய பாவங்களுக்காக அவரைத் தண்டித்தார். நியாயத்தீர்ப்பின் சட்டத்தின்படி,எந்தவொரு குற்றமும் ஒரு முறை மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்,அது கர்த்தராகிய இயேசுவின் உடலில் வந்தது,மேலும் நாம் அனைவரும் விடுவிக்கப்பட்டு நீதியின் அடிப்படையில் அதாவது சட்ட அடிப்படையில் நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம்.பாவியை நீதிமான்களாக்குவதில் தேவன் நீதியுள்ளவராயிருக்கிறார்.இதுவே உண்மையான நற்செய்தி! அல்லேலூயா!!

என் பிரியமானவர்களே,நீங்கள் தேவனை அறிவதில் உண்மையுள்ளவர்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் பல சமயங்களில் நீங்கள் தேவனின் பரிசுத்தத்தின் தரத்திற்கு ஏற்ப வாழத் தவறுகிறீர்கள்!கலங்காதிருங்கள்! உங்கள் இதயம் உங்களைக் குற்றப்படுத்த வேண்டாம்,ஏனென்றால் தேவன் உங்களைக் குற்றப்படுத்துவதில்லை குறிப்பாக ,நீங்கள் தோல்வியடையும் போது தேவன் பாவிகளை நீதிமான்களாக்குகிறார் என்ற நற்செய்தியை ஒப்புக்கொண்டு அறிக்கைசெய்யுங்கள்,விரைவில் அக்ஷணமே நீங்கள் தேவ நீதியின் வெகுமதியை அனுபவிப்பீர்கள்,அது பாவத்தின் நாட்டத்தை விரட்டியடித்து,தேவனின் வகையான நீதியின் அம்சத்தில் நீங்கள் ஆளுகை செய்யத் தொடங்குவீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பாவங்களை மேற்கொண்டு ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

17-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

1.அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
2.ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது?ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான்,அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.ரோமர் 4:1-3 NKJV

என் அன்பானவர்களே,நாம் நம்முடைய சுய நீதியை அல்ல தேவனுடைய நீதியைப் புரிந்துகொள்வதே அவசியம். காரணம ஆன்மீகம் அல்லது இயற்கையான ஆசீர்வாதங்கள், தனிப்பட்ட அல்லது பொதுவான ஆசீர்வாதங்கள், குடும்பம் அல்லது சமூகம் சார்ந்த ஆசீர்வாதங்கள்,ஆரோக்கியம் அல்லது செல்வம்,அமைதி அல்லது மகிழ்ச்சி என எல்லா ஆசீர்வாதங்களும் இந்த தெய்வீக நீதியிலிருந்து மட்டுமே தொடங்குகிறது. அல்லேலூயா!

தேவனின் வகையான நீதியைப் புரிந்துகொள்வதற்கு,நாம் ஆபிரகாமின் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும், தேவன் அவரைப் புகழ்ந்தார் மேலும் அபிராகமை நீதியாகக் கருதினார், ஏனென்றால் தேவன் அவரை பூமியின் அனைத்து குடும்பங்களுக்கும் பிரதானத் தலைவராக ஆக்கினார்,வேறுவிதமாகக் கூறினால் ஆபிரகாம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் தந்தையாக ஆக்கப்பட்டார். .
பிறகு, ஆபிரகாம் தேவனுடைய நீதியைப் பற்றி என்ன கண்டுபிடித்தார் (வசனம் 1)?
முதலாவதாக,தேவனுடைய நீதி முற்றிலும் தேவனுடையது என்றும் அதற்கு மனித பங்களிப்பு இல்லை என்றும் அவர் கண்டறிந்தார்.இந்த முக்கியமான பாடத்தை நேற்று நாம் கற்றுக்கொண்டோம்.

இரண்டாவதாக, தேவனுடைய இந்த நீதி மனிதனுக்கு தேவனிடமிருந்து ஒரு பரிசாக வருகிறது,மனிதனின் செயல்களுக்கு வெகுமதியாக அல்ல தேவன் ஒருபோதும் யாருக்கும் கடனாளி அல்ல!
நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால்,மாத இறுதியில் எனக்கு ஒரு மாத ஊதியம் அல்லது சம்பளம் கொடுக்கப்படும்.ஆகையால் நான் பணிபுரியும் நிறுவனம் எனக்கு கடனாளி.இன்றைய தியானப் பகுதியில் வசனம் 4-ன் அர்த்தம் இதுதான். என்னால் ஒருபோதும் தேவனின் தயவை ஊதியமாக உழைத்து பெற முடியாது,இல்லையெனில் அதை ஒருபோதும் கிருபை என்று அழைக்க முடியாது.அதனால்தான் கிருபை எனது நற்செயல்களால் சம்பாதிக்க முடியாத ஈவு என்று அழைக்கப்படுகிறது.

ஆகவே, தேவனின் தயவானது சம்பாதிக்க முடியாத கிருபையாக இருப்பதால்,நாம் அதை விசுவாசத்தால் மட்டுமே (நம்பிக்கை மூலம்) பெற முடியும். மேலும்,அது அளவற்ற தயவாக இருந்தால்,அது நிபந்தனையின்றி வர வேண்டும்,எந்த நிபந்தனைகள் இணைக்கப்படாமல் இருக்க வேண்டும்,அல்லது எனது முயற்சிகள் நடைமுறைக்கு வரும்,பின்னர் அதை எங்கள் கூலியாகக் கூறுவோம்,கிருபையாக அல்ல.

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்று நம்புங்கள்.நீங்கள் நிச்சயமாகவே ஆளுகை செய்ய முன்குறிக்கப்பட்டிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

16-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

1. அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
2. ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை.
3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.ரோமர் 4:1-3 NKJV

ஆபிரகாம் ‘விசுவாசத்தின் பிரதானத் தலைவர்.அது அவரின் விசுவாசத்தினால் நீதியாக பார்க்கப்பட்டது . சுவிசேஷம் முதன்முதலில் ஆபிரகாமுக்கு தேவனால் பிரசங்கிக்கப்பட்டது (கலாத்தியர் 4:8).ஆபிரகாம் அதை நம்பினார்.எனவே ,அவர் விசுவாசத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்,மேலும் அவர் நம்முடைய தந்தையுமாய் இருக்கிறார்.

ஆபிரகாம் தேவனை விசுவாசித்தார் என்பதற்கான அவரது சாட்சியம் இதுவே,அது அவருக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது அல்லது வரவு வைக்கப்பட்டது! அவர் கீழ்ப்படிந்ததால் அல்ல,ஆனால் அவர் விசுவாசித்ததால் தேவனின் பார்வையில் அவர் நீதியுள்ளவராக அறிவிக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. அவர் விசுவாசித்த பிறகே அவருடைய கீழ்ப்படிதல் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன.

ஆபிராகாமல் எதுவும் இல்லை,அனைத்தும் தேவனுடைய கிருபையால் சாத்தியம்’என்று அவர் ஒப்புக்கொண்டார்,மேலும் அது ஆபிரகாமுக்கு நீதிக்காகக் கணக்கிடப்பட்டது .அதாவது தேவன் ஆபிரகாமை எப்போதும் முற்றிலும் நீதியுள்ளவராகப் பார்க்கிறார்.
நம் செயல்களை நம்ப முடியாது,ஏனென்றால் அவை சில நேரங்களில் நல்லதாகவும் மற்றும் சில நேரங்களில் கெட்டதாகவும் இருக்கும்.ஆனால்,தேவன் எப்போதும் நல்லவர்! அவர் உண்மையுள்ளவர்.அவரை நம்பலாம், தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்த அவருடைய குமாரனாகிய இயேசுவை உலகத்திற்கு அனுப்பினார், அவருடைய கீழ்ப்படிதல் நாம் முழுமனதோடு விசுவாசிக்கும் போது தேவனுடைய நீதியை நம் வாழ்வில் கொண்டுவருகிறது. (ரோமர் 5:19).

ஆம் என் பிரியமானவர்களே, தேவனின் தயவான நீதி முற்றிலும் தேவனுடையது,அதற்கு மனித பங்களிப்பு எதுவும் இல்லை.நாம் அவருடைய நீதியை நம்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம், நமது நம்பிக்கையின் வெளிப்பாடு விசுவாச அறிக்கையாகும்.
ஒவ்வொரு முறையும்,“நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்” என்று சொல்லும் போது அது தேவனுடைய செயல் தான் என்றும்,என்னுடைய செயல் ஒன்றுமில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். இயேசுவின் கீழ்ப்படிதலே தேவனைப் பிரியப்படுத்தியது,என் கீழ்ப்படிதல் அல்ல.இந்த விசுவாசம் என்னை எப்போதும் ஆளுகை செய்ய வைக்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவ்ருடைய நீதியின் மூலம் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!