இயேசுவின் நீதியே மெய்ப்பிக்கப்படுகிறது!

இன்று உங்களுக்குக்கான கிருபை!
13ஆகஸ்ட் 2026

இயேசுவின் நீதியே மெய்ப்பிக்கப்படுகிறது!

வேதவசனம்:
நாம் பலவீனராயிருக்கையில், குறித்த காலத்தில் கிறிஸ்து பக்தியற்றவர்களுக்காக மரித்தார்.”
ரோமர் 5:6

பிரியமானவர்களே,
கிருபையைப் பற்றிய மிகச்சிறந்த வெளிப்பாடுகளில் ஒன்று இதுதான்:

தேவனுக்கு முன்பாக எனக்கு நம்பிக்கையைத் தருவது என்னுடைய நீதி அல்ல—அது இயேசுவின் நீதி.

பரிசுத்த ஆவியானவர் மெய்ப்பிக்க வருவது நம்முடைய நீதியை அல்ல, மாறாக இயேசுவின் நீதியையே ஆகும்.”

ரோமர் 5:6–8 வசனங்கள் நம்மைக்குறித்து நாம் பெருமை பாராட்டுவதற்கான அனைத்துக் காரணங்களையும் நீக்கிவிடுகின்றன.

நாம் ஏற்கனவே பலசாலிகளாக இருந்ததால் கிறிஸ்து நமக்காக மரிக்கவில்லை.

நாம் போதுமான அளவு நல்லவர்களாக மாறியிருந்ததால் அவர் நமக்காக மரிக்கவில்லை.

நாம் இன்னும் பாவிகளாக இருந்தபோதே அவர் நமக்காக மரித்தார்.

இதன் பொருள் என்னவென்றால், நீதி என்பது நம்முடைய நற்செயல்களுக்காக தேவன் அளிக்கும் வெகுமதி அல்ல.

நீதி என்பது கிறிஸ்துவின் மூலமாக தேவன் அருளும் ஒரு ஈவு (பரிசு)

ஆகவே, நம்முடைய அடையாளம் பாதுகாப்பானதாக இருக்க முடியும்.

என் நீதி என்பது என்னுடைய சொந்த நீதியை சார்ந்ததாக இருந்திருந்தால், என் செயல்பாடு அல்லது நடத்தையைப் பொறுத்து என் விசுவாசம் ஏறியும் இறங்கியும் இருந்திருக்கும்.

ஆனால் என் நீதி என்பது இயேசுவின் நீதியாகவே இருந்து,அது எனக்கு அவருடைய பரிசாக அளிக்கப்பட்டிருந்ததால், என் நம்பிக்கை அவர் மீதே நிலைத்திருக்கும்.

பரிசுத்த ஆவியானவர் உயிர்த்தெழுதலின் மூலம் இயேசுவை தேவனுடைய குமாரனாக மெய்ப்பித்தார்; மேலும் நம்மை நீதிமான்களாக்குவதற்காக அவரை எழுப்பினார். எனவே, அவருடைய நீதியே நம்முடைய புதிய அடையாளமாக மாறுகிறது.

இதுவே கிருபை!

ஜெபம்
அப்பா தேவனே,அவருடைய நீதியை எனக்குப் பரிசாக அளித்ததற்காக உமக்கு நன்றி.உம்முடைய நீதி என்னுடைய நற்செயல்களை சார்ந்ததல்ல,மாறாக இயேசு கிறிஸ்துவை சார்ந்ததே.சுய நீதியையும்,என் சொந்த நீதியை நிலைநாட்ட நான் மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியையும் நான் நிராகரிக்கிறேன். என் நம்பிக்கை கிறிஸ்துவின் மீது மட்டுமே உள்ளது. இந்த புதிய அடையாளத்தின் உணர்வில் பரிசுத்த ஆவியானவர் என்னை இடைவிடாமல் நிலைநிறுத்துவாராக. இயேசுவின் நாமத்தில்,ஆமென் 🙏.

விசுவாச அறிக்கை
நான் என் சொந்த நீதியில் தேவனுக்கு முன்பாக நிற்கவில்லை. நான் இயேசுவின் நீதியில் நிற்கிறேன். அவருடைய நீதியே என்னுடைய நீதி. அவர் செய்து முடித்த கிரியையே என் நம்பிக்கை. கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன்!ஆமென் 🙏

முக்கியக் கருத்து:
பரிசுத்த ஆவியானவர் உங்கள் செயல்பாட்டை மெய்ப்பிப்பதில்லை; மாறாக, உங்கள் அடையாளமாக மாறியிருக்கும் இயேசுவின் நீதியையே அவர் மெய்ப்பிக்கிறார்!


கிருபை நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *