இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய உண்மையான ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்

18-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய உண்மையான ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

27. விசுவாசத்தினாலே அவன் (மோசே) அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.(எபிரெயர் 11:27 ).

எகிப்து என்ற வல்லரசின் கவர்ச்சியையும் மகிமையையும் மோசே விட்டுகொடுத்தார் . இன்றைய காலத்தில் நாம் அதையே ஒப்பிட வேண்டும் என்றால், அது புகழ் மற்றும் செழுப்பில் நன்கு முன்னேறிய அமெரிக்கா அல்லது வேறு எந்த வளர்ந்த நாட்டையும் குறிக்கலாம்.
மோசே எடுத்த அந்த முடிவு ஒரு பெரிய நம்பிக்கையையும் எல்லா சோதனைகளையும் தாங்கக்கூடிய மனப்பக்குவத்தை கொடுக்கும் .
அத்தகைய உறுதியான முடிவெடுப்பதற்கும்,மோசேயின் ஆற்றல்மிக்க விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்த உள்அனுபவம் என்ன?

மேற்கண்ட வசனத்தை நாம் மீண்டும் கூர்ந்து கவனித்தால், மோசே கண்ணுக்கு தெரியாத கடவுளை பார்த்தார் என்பது நமக்கு புரிகின்றது .அவரது ஆற்றல்மிக்க மற்றும் உறுதியான நம்பிக்கைக்கு இதுவே ஒரே காரணம். 

கடவுளைப் பார்ப்பது எனபது மனிதனின் திறனிலும் இல்லை, அது மனிதனின் விருப்பத்திலும் இல்லை. இது கடவுளின் முயற்சி!
இரண்டாவதாக, கண்ணுக்குத் தெரியாத கடவுளைப் பார்கும்போது , உலகில் மிகவும் பிரபலமான தேசத்தின் அழகையும் பெருமையையும் கூட விட்டுவிடக்கூடும்  இயற்கையான கண்களால் பார்க்கப்படாத உலகம் மிகவும் உண்மையானது மற்றும் உலகத்தை விட நித்தியமானது என்பதை நிரூபிக்கிறதை இன்று நாம் பார்க்கிறோம் .

விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் கடவுளின் ஆசீர்வாதம் இது! உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு தன்னைப் பார்க்க ஆசைப்பட்ட அனைவருக்கும் மற்றும் தன்னை வெளிப்படுத்த அவர் ஆசைப்பட்ட அனைவருக்கும் தம்மை வெளிப்படுத்தினார்.  உண்மையில் கண்ணுக்குத் தெரியாததைக் காண்பதே உண்மையான பாக்கியம்.ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய உண்மையான ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  68  =  78