உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

31-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.(பிலேமோன் 1:6) NKJV.

இந்த மாத இறுதிக்கு வரும் வேளையில்,மாதம் முழுவதும் ஓய்வு அல்லது இளைப்பாறுதலைக்குறித்து அறிந்த சத்தியத்தை நாம் சீர்தூக்கி பார்க்க அழைக்கப்படுகிறோம்.​​ஓய்ந்திருப்பதால் நாம் இந்த வாழ்க்கையில் ஆட்சி செய்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மனிதன் வியர்த்து உழைக்க வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் நினைக்கவில்லை.இன்று நாம் உழைத்தாலும், நாம் கிருபையின் படிகளில் லகுவாக நடக்கிறோம் .நாம் செய்துதான் முடிக்க வேண்டும் என்று நம் செயல்திறனை நம்பும் மனநிலையுடன் அல்ல,மாறாக “ஏற்கனவே நமக்காக செய்து முடிக்கப்பட்டது ” என்ற மனநிலையுடன் செயல்படுகிறோம் .அல்லேலூயா!

தேவன் நமக்காகத் திட்டமிட்டிருக்கும் விதமான ஓய்வு இதுவே:
நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் ஏற்கனவே வழங்கியுள்ளார்.இயேசு கிறிஸ்து நமக்காக செய்த தியாக மரணத்தின் நிமித்தமாக கடவுள் எல்லாவற்றையும் நமக்கு வழங்கியுள்ளார் என்று நாம் நம்ப வேண்டும்.

இதை நாம் உண்மையாகப் புரிந்துகொள்ளும்போது, ​​நம் இதயங்கள் நன்றியறிதலாலும், உருக்கமான அறிக்கையாலும் நிறைந்திருக்கும். நம்முடைய ஜெபத்தில் அதிக நேரம் நன்றி செலுத்துதலால் நிறைந்திருக்குமே தவிர பிரார்த்தனைகள்/கோரிக்கைகள் சிலதாகவே இருக்கும்.
கர்த்தர் தம்முடைய முடிக்கப்பட்ட வேலைகளில் உங்களை இளைப்பாறச் செய்வாராக, இந்த ஓய்வில் அவர் உங்கள் வாழ்க்கையில் ஆளவும், அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கவும் செய்வார்.ஆமென் 🙏.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

68  +    =  70