ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள் !

26-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள் !

50. இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
52. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. ( மத்தேயு 27:50-52 NKJV)

மகா பரிசுத்த ஸ்தலம் என்று அழைக்கப்பட்ட தேவாலயத்தில் கடவுளின் பிரசன்னம் திரையிடப்பட்டிருந்தது, மேலும் பிரதான ஆசாரியர் மட்டும் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உள்ளே நுழைய முடியும். ஆனால், கடவுள் தம்மை விசுவாசிக்கிற ஒவ்வொருவரிலும் வசிக்க விரும்பினார்.

இந்த காரியம் எப்படி சாத்தியமானது ? – இயேசு முழு உலகத்தின் பாவங்களையும் தன்மீது சுமந்துகொண்டு, சிலுவையில் அவருடைய சரீரத்தில் பாவத்தின் தண்டனையை ஏற்றுக்கொண்டு செய்த இந்த விலையேறப்பெற்ற தியாகத்தின் மூலம் மட்டுமே இதை அடைய முடிந்தது . இயேசு கூக்குரலிட்டு தம்முடைய ஆவியை ஒப்புக் கொடுத்தார். அவரது மரணம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிரிவினையின் நடுச்சுவரை கிழித்தெறிந்தது. எனவே கடவுளின் பிரசன்னம் மனிதர்களின் இதயங்களுக்குள் நுழைந்தது.
அல்லேலூயா 🙏

இன்று ,சிலுவை தியாகத்தின் 2வது நோக்கமாக நாம் பார்ப்பது – கடவுள் மனிதனுக்குள் என்றென்றும் வாசம் செய்வதாகும் . கிறிஸ்து நமக்குள் வசிப்பதே மகிமையின் நம்பிக்கையாயிருக்கிறது .

இயேசுவின் பிறப்பின் வாயிலாக கடவுள் நம்மோடு இருக்கிறார். இம்மானுவேல் என்பதற்கு ” கடவுள் நம் மோடு இருக்கிறார் “என்று பொருள்படுகிறது .ஆனால் இயேசுவின் மரனத்தின் வாயிலாக கடவுள் நமக்குள் வாசம்பண்ணுகிறார் .
இந்த உண்மையை நீங்கள் நம்பி, இயேசுவை உங்கள் இரட்சகராகவும் ஆண்டவராகவும் உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, ​​உயிர்த்தெழுதலின் வல்லமை உங்களுக்குள்ளும் உங்கள் மூலமும் செயல்படத் தொடங்குகிறது.
உயிர்த்தெழுதல் என்றால் உங்களுக்குள் கிறிஸ்த வாசம்பண்ணுகிறார் என்றும், இம்மானுவேல் என்றால் உங்களுடன் கடவுள் இருக்கிறார் என்றும் பொருள்படும் .

உயிர்த்தெழுதல் என்பது பாவத்தால் கறைபடாத முடிவற்ற வாழ்வாகும், அங்கு நீங்கள் வலி, நோய், சிதைவு, போன்றவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. மரணத்தையே இந்த முடிவற்ற வாழ்க்கை விழுங்குகிறது மற்றும் நீங்கள் என்றென்றும் சாவாமையுடன் வாழ்கிறீர்கள் நீங்கள் என்றென்றும் சுதந்திரமாக இருக்கிறீர்கள், என்றென்றும் தெய்விக சுகத்தோடு இருக்கிறீர்கள,மற்றும் என்றென்றும் மீட்கப்பட்டிருக்கிறீர்கள் . ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்களுக்குள் கிறிஸ்துவை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  48  =  58