மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நம் வாழ்வில் தேவன் முன்குறித்த ஸ்தலத்தை அறிந்து செழிக்கச்செய்கிறது!

22-01-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நம் வாழ்வில் தேவன் முன்குறித்த ஸ்தலத்தை அறிந்து செழிக்கச்செய்கிறது!

1. ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான்.

6. ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.

12. ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான். ஆதியாகமம் 26:1, 6, 12 NKJV

நம் வாழ்வில் சவாலான சூழ்நிலைகள் மற்றும் சிரமங்கள் வரும்போது,இயல்பான மனிதப் போக்கானது , அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடியவற்றிலிருந்து, நாம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணரும் மற்றொரு இடத்திற்குத்தேடி ஓடுவதுதான்.

ஈசாக்கு இதற்கு விதிவிலக்கல்ல ,அவரும் இந்த சோதனையை அனுபவித்தார்.அவர் பஞ்சத்தின் நிமித்தமாக எகிப்துக்கு செல்ல விரும்பினார்.இருப்பினும், அவரது தந்தை ஆபிரகாமின் தேவன் தலையிட்டு அவரை தங்கும்படி அறிவுறுத்தினார்.
அவர் எங்கிருந்தாரோ,அதே இடத்தில ஈசாக்கினுடைய கற்பனைக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட விதத்தில்
வாக்குத்தத்தின் ஆசீர்வாதத்தை தேவன் நிறைவேற்றினார் ஏனென்றால் அது ஈசாக்குக்கு தேவன் நியமித்த களம்.

ஈசாக்கு ,உடனே கீழ்ப்படிந்து, கர்த்தராகிய தேவனால் அறிவுறுத்தப்பட்டபடி கேராரில் தங்கி இருந்தார்(v6). இதோ, இதோ, குறுகிய காலத்தில்,கடவுள் தம்முடைய உண்மைத்தன்மையை நிரூபித்து தேவனுடைய வாக்குத்தத்தின் ஆசீர்வாதத்தை நிறைவேற்றினார்,அதுவே இன்றுவரை அது நம் காதுகளில் ஒலிக்கிறது,அவரை அழைத்த தேவன் மகிமையானவர்,உண்மையுள்ளவர் .ஈசாக்குக்கு உபதேசம் செய்து அவர் கீழ்ப்படிந்ததால் அவரை ஏராளமாக ஆசீர்வதித்தார். அல்லேலூயா!

என் அன்பானவர்களே,இன்று உங்களுக்கும் இது பொருந்தும் .அதே ஈசாக்கின் தேவன் இயேசுவின் நாமத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகள் அனைத்தையும் தாண்டி உங்களை வளமாக்குவார்! இந்த வாரத்திலும், வரும் வாரங்களிலும் இயேசுவின் நாமத்தில் எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் செழிப்பீர்கள் என்பதே என் பிரார்த்தனையும், உங்கள் மீதான எனது தீர்க்கதரிசன அறிவிப்பும்! 2024 உங்கள் பற்றாக்குறை மற்றும் ஓயாத போராட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உங்கள் வாழ்வு செழிப்படையும் மற்றம் இது மகிமையின் ஆண்டாக அமையும் !

நாம் அப்போஸ்தல நடைமுறைகளைப் பின்பற்றும்போது,அப்போஸ்தல வல்லமையைக் காண்போம்! தேவன் முன்குறித்த இடத்தில் ( DOMAIN ) நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற தேவனின் அழைப்பிற்கு ஈசாக்கு பொறுமையோடு கீழ்ப்படிந்தார்.
ஆட்சி செய்வதற்கான திறவுகோல், இறைவன் உங்களுக்காக நியமித்துள்ள “இடத்தில்” நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதாகும் மாறாக,உங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று நீங்கள் நினைக்கும் எந்த இடத்திலும் ஆசீர்வாதம் பெற முடியாது . .
ஆண்டவர் உங்களுக்காக வைத்திருக்கும் களத்தில் நீங்கள் நிலைநிறுத்தப்படும்போது ஆதிக்கம் திறம்பட செயல்படத் தொடங்குகிறது,ஏனெனில் அந்த களமானது செழிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் அந்த செழிப்பு ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது! ஆமென் ! 🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நம் வாழ்வில் தேவன் முன்குறித்த ஸ்தலத்தை அறிந்து செழிக்கச்செய்கிறது*!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  25  =  35